நோர்வே சிவசுப்பிரமணியர் ஆலயம் தங்களை நட்புடன் வரவேற்கிறது!
Welcome to Norges Sivasubramaniyar temple!
மலையும், கடலும், வற்றாத செழுமையும் நிறைந்த நோர்வே நாட்டின் ஒஸ்லோ எனும் தலைநகரமாம், அங்கு இந்து மதம் தன் மெஞ்ஞானத்தின் மூலம் மக்களுக்கு மாயையை விலக்க நோர்வே சிவசுப்பிரமணியர் அருள் பாலிக்கின்றார் .
நோர்வே சிவசுப்பிரமணியர் ஆலயமானது புலம்பெயர் வாழ்வாயினும் அமிழ்தத்தை ஒத்த தமிழையும், சைவ சமயத்தையும் தமிழரோடு இணைந்த கலை, கலாச்சாரம், பண்பாட்டு நெறிமுறைகளையும் பாதுகாக்கும் நோக்கில் 23.07.1993 அன்று ஆரம்பிக்கப்பட்டது, நோர்வே இந்து கலாச்சார மன்றம்.
இன்று முருகப்பெருமான் வீற்றிருக்கும் ஆலயம், 01.05.1998ம் ஆண்டு சித்திரை மாத வளர்பிறை புனர்பூச நட்ச்சத்திரத்தில் கும்பாபிசேகம் நடைபெற்று, அதே ஆண்டு ஆதித் திங்களில் அலங்கார உற்சவமும் நடந்து, இன்றுடன் 25 வருடங்கள் கடந்து இந் நாட்டில் வாழும் மக்களுக்கு அருள் பாலித்து வருகின்றார் முருகப்பெருமான்.
அமிழ்தம்: மழை பெய்ய உலகம் வாழ்ந்துவருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று
அர்ச்சனை செய்ய விரும்பும் அடியார்கள் கீழ்காணும் முறையில் அர்ச்சனை செய்துகொள்ள முடியும்.
விப்ஸ் (Vipps) ஊடாக அர்ச்சனை செய்யும் முறை :
1.விப்ஸ் (Vipps) இலக்கம் 528603 எனும் இலக்கத்திற்கு முதலில் பணத்தை செலுத்துதல்.
2.பணத்தை செலுத்திய பின்னர் 90747845 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு உங்கள் அல்லது அர்ச்சனை செய்ய விரும்புவரின் பெயர் மற்றும் நட்சத்திர விபரங்களை குறுந்தகவலின்(SMS) ஊடாக அனுப்பி வைக்கவும்.
நன்றி.